ஆனால் தற்போது குடிநீர் சுத்தமானதாக கிடைப்பதில்லை. இதனால் பல வகையான நோய்கள் உண்டாகின்றது.
எனவே நீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும். அப்படி கொதிக்க வைக்கும் போது அதில் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினால் சிறுநீரகக் கோளாறு, நீர் சுருக்கு, உடல் சூடு, தலைமுடி உதிர்தல், தாகம், ஜலதோஷம் போன்றவை நீங்கும்.
மேலும் நீரினால் உண்டாகும் நோய்கள் ஏதும் நம்மை நெருங்காது. இதற்கு காரணம் சீரக நீர் உடலில் உள்ள அசுத்த நீரை வியர்வை சுரப்பி வழியாக வெளியேற்றுகிறது.