
நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொசுக்களை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள்களால் சர்க்கரை நோயை ஏற்படுவதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கொசுவர்த்தி சுருள்கள் ஆஸ்துமா, புற்றுநோய், இதய நோய்கள், வாதங்கள் ஆகியவற்றுடன் இன்சுலின் அளவை குறைத்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கொசுவர்த்தி சுருள் புகையை சுவாசிப்பதற்கும், வானங்களின் புகையை சுவாசிப்பதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை எனவம் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.