வெள்ளி, 27 ஏப்ரல், 2012

புற்றுநோயை தடுக்கும் பீசா: ஆய்வில் தகவல்

பீசாவை அதிக அளவு சாப்பிட்டால் பெருஞ்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இங்கிலாந்தின் லாங் ஐலேண்டு பல்கலைகழக பேராசிரியர் சுப்ரியா பவேத்கர் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.
அப்போது ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சுரப்பி புற்றுநோயை குணப்படுத்துவதை கண்டறிந்தனர். மேலும் பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர்.
ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.
இது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது என பேராசிரியர் சுப்ரியா தெரிவித்துள்ளார்.